சனி, ஏப்ரல் 10, 2010

குழந்தைகளுக்கு முதலிடம் தாருங்கள்...

3 கருத்துகள்
எத்தனையோ விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நாம் போயிருப்போம். குறிப்பாகக் குழந்தைகள் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஒரு குழந்தையின் நிலையிலிருந்து, குழந்தைக்கேயான இயல்பான சிக்கல்களை நாம் பார்த்திருக்கிறோமா என்பதை இப்போது நினைத்துப் பார்க்கவேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. இந்த விஷயத்துக்குள் ஆழமாகப் போவதற்கு முன்னால் ஒரு சிறு சம்பவத்தைப் பார்த்துவிடுவோம்.

சென்னையில் உள்ள மிக முக்கியமான ஆடிட்டோரியங்களில் ஒன்று அது. அங்கே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த விழாவில் பல பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருந்தன. விழா சரியாக மூன்று மணிக்குத் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள். இரண்டரை மணிக்கே பள்ளி மாணவர்கள் எல்லாம் வந்திருந்து வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். வந்திருந்த மாணவர்களில் ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் நிறையபேர் இருந்தார்கள். கூடவே, அவர்களுடைய பெற்றோர்களும் வந்திருந்தார்கள். என்னென்னவோ காரணங்களால், மூன்றரை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சித் தொடங்குவதற்கு முன்பாக, மேடையில் பேசப் போகிறோமே, பாடப் போகிறோமே, ஆடப் போகிறோமே என்கிற பயம் கொஞ்சம்கூட இல்லாமல் அந்த மாணவர்கள், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள் அம்மாவின் மடியைவிட்டு இறங்காமல் உட்கார்ந்திருந்தார்கள். சில குழந்தைகள் பக்கத்தில் இருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மூன்றரை மணிக்கு அறிவிப்பாளர் வந்தார். முதல் நிகழ்ச்சியாக குழந்தைகள் கலைநிகழ்ச்சி நடைபெறும், அதன்பின் முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள், இறுதியாக பாராட்டு விழாவும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று சொன்னார். அவர் கூறியபடியே குழந்தைகளின் கலைநிகழ்ச்சி முதலில் தொடங்கியது. அது முடிந்ததும் குழந்தைகள் மேடைக்கு அருகிலேயே அமர வைக்கப்பட்டார்கள்.

அதன் பிறகு, முக்கிய விருந்தினர்களும் விழா அமைப்பாளர்களும் மாறி மாறிப் பேச ஆரம்பித்தார்கள். அவர்களுக்குத் தங்கள் பேச்சைக் கேட்க எதிரே ஒரு கூட்டம் உட்கார்ந்திருக்கிறதே என்கிற உற்சாகம். குழந்தைகளால் எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும் என்கிற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல், ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி பேச்சில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை இழந்துகொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் வந்திருந்தவர்களுக்கு ஒரு கப் டீ கூட கொடுக்கவில்லை நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.

எல்லோரும் பேசி முடித்தபோது மணி ஐந்தரை. அதற்குப் பிறகு முக்கிய விருந்தினர்களை அமைப்பாளர்கள் பாராட்டி, விருதுகளும் பரிசுகளும் கொடுக்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஒரு குழந்தையின் தந்தை விழா அறிவிப்பாளரிடம் போனார்.

‘சார், குழந்தைகளெல்லாம் ஒரு மணிக்கு சாப்பிட்டுட்டு வந்தாங்க. இப்போ மணி அஞ்சரைக்கும் மேல ஆகுது. முதல்ல அவங்களுக்கு பரிசைக் குடுத்து அனுப்புங்க. அதுக்கப்புறம் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துங்களேன்!’ என்று சொல்லிப் பார்த்தார்.

‘அதெல்லாம் முடியாது சார். எல்லா நிகழ்ச்சிகளும் முடிஞ்சபிறகுதான் குடுக்க முடியும். இஷ்டம் இருந்தா இருங்க. இல்லைன்னா, உங்க குழந்தையைக் கூட்டிட்டுப் போங்க!’ என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிட்டார். எங்கே, எல்லாக் குழந்தைகளும் அவர்கள் பெற்றோரும் போய்விட்டால், கூட்டம் குறைந்துவிடுமே என்கிற பயம் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு.

அறிவிப்பாளரிடம் பேசியவருக்குக் கோபம் வந்துவிட்டது. சட்டென்று தன் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே போனார். அவரைத் தொடர்ந்து நிறையபேர், தங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே போக ஆரம்பித்தார்கள்.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. பொதுவாகவே கலை நிகழ்ச்சி என்றாலே எல்லோரும் ரசிக்கிற ஒன்று என்று அர்த்தம். அதிலும் குழந்தைகள் பங்கேற்கிற கலை நிகழ்ச்சி என்றால் சொல்லவே வேண்டாம். பங்கேற்கும் குழந்தைகளின் குடும்பத்திலுள்ள எல்லோருமே ஆர்வத்தோடு நிகழ்ச்சியைக் காண வந்துவிடுவார்கள். சம்பந்தப்பட்ட குழந்தைகளின் உறவினர்கள் மட்டுமல்ல; எந்தக் குழந்தை நடனம் ஆடினாலும், யோகாசனம் செய்தாலும், ஜிம்னாடிக்ஸ் போன்ற கடினமான வித்தைகளை செய்து காட்டினாலும், பார்க்கிற ஒவ்வொருவருடைய கைகளும் தானாகக் கரவொலி எழுப்பும். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகள் சரியாக கவனிக்கப்படுகிறார்களா என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இப்படி குழந்தைகள் நடத்தப்படுவது தவறு என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு ஏன் புரிவதில்லை? அதற்குக் காரணம், அவர்கள் நிகழ்ச்சி நன்றாக நடைபெறவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, வருகிறவர்களைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

மாணவர்களோ, குழந்தைகளோ வந்து அமர்ந்த சிறிது நேரத்தில், அவர்களுக்கு பிஸ்கட், பழம் போன்றவற்றை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். இதற்கும் சேர்த்து, நிகழ்ச்சிக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டியது மிக அவசியம். அதே போல, குழந்தைகள் ஒவ்வொருவரும் கலைநிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்தவுடன், குளிர்பானமோ, அல்லது சூடான பானமோ தரவேண்டும். நிகழ்ச்சி நான்கு மணி நேரத்தையும் தாண்டிப் போகிறது என்றால் சிற்றுண்டி தரவேண்டும்.

இதன்மூலம் குழந்தைகளும் மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். குழந்தைகளை நிகழ்ச்சிக்கு அனுப்பும் பெற்றோர்களும் கவலையின்றி காத்திருப்பார்கள். அதே போல ஒரு பள்ளி, வெளி நிகழ்ச்சிகளுக்குப் பள்ளிக் குழந்தைகளை அனுப்பும்போது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சரியாக கவனிக்கிறார்களா என்று சோதிக்கவேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. ‘உங்கள் குழந்தை இங்கே நடனமாடுகிறது‘ என்று சொல்லிவிடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக சில பள்ளிகள் நினைக்கின்றன. அது தவறு.

குழந்தைகளின் திறமை வளர்ப்பது முக்கியம்தான். அதேசமயம் மணிக்கணக்காக, அவர்கள் காத்திருக்கும்போது, அந்தப் பிஞ்சு உள்ளங்கள் வாடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம்.


(29.03.2010 ல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

புதன், ஏப்ரல் 07, 2010

உதவி தேவை

0 கருத்துகள்

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு, அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

வெள்ளி, மார்ச் 19, 2010

மீண்டும் கலைஞருக்கு வெற்றி...

0 கருத்துகள்
எதிர்ப்பு என்றாலே கலைஞர் கருணாநிதிக்கு வெற்றி என்றாகிவிட்டது.

இன்று புதிய சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக கூடுகின்ற நேரம்.

பேரவைத் தலைவர் வந்ததும், வழக்கம் போல் திருக்குறளுடன் அவைத் தொடங்கியது. நிதி அறிக்கை நிதி அமைச்சர் அன்பழகன் வாசிக்க எழுந்தார்.

கூச்சல், சத்தம் வந்தது.

அதிமுக வினர் கருப்பு உடையில் வந்திருந்தார்கள்.

யாரையோ ராஜினாமா செய் ராஜினாமா செய் என்று முழக்கமிட்டார்கள்.

புதிய சட்டப்பேரவையில் முதல் நிகழ்ச்சியே இப்படி எதிர்ப்பாக அமைந்தது.

எத்தனையோ எதிர்ப்புகளை எல்லாம் மீறி வெற்றிக் கண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் இப்படியொரு வெற்றியைத் தந்துவிட்டார்கள் அதிமுகவினர்.

புதிய மன்றத்தில் செயலாற்ற பகையுணர்வை காட்டாமல் நட்புணர்வைக் காட்டி நாட்டுக்கு நல்லது செய்யும் உறுப்பினர்களை இனியாவது நாம் தேர்ந்தெடுக்க முயல்வோம்.

வியாழன், மார்ச் 04, 2010

‘ஓ’ போடுங்கள் நித்யாவுக்கு....

0 கருத்துகள்
நித்தியானந்தர் செய்தது தப்பு.

ரஞ்சிதா செய்தது தப்பு.

அந்த அசிங்கத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது சன் நியூஸ் தப்பு.

அந்த அசிங்கத்தின் சிடியை நக்கீரன் விலைக்கு வேண்டுமா? என்று கேட்டது தப்பு.

அந்த வீடியோ காட்சிகளை மறுபடி மறுபடி பார்த்தது தப்பு.

அந்தக் காட்சி முழு வடிவை இணையத் தளத்தில் தேடியது தப்பு.

புகைப்படங்களை உற்று உற்று நோக்கியது தப்பு.

இணையத் தளத்தில் அன்றைய நாள் முழுதும் மற்ற வேலைகளை விட்டு, இதையே வேலையாகச் செய்துகொண்டிருந்து தப்பு.

சிடியைத் தேடி பர்மா பஜார் போன்ற இடங்களில் தேடி அலைந்தது தப்பு.

ஒரு தப்பிலிருந்து எத்தனையோ தப்புகள்.

தப்புகளில் நித்தியானந்தர் செய்தது பெரிய தப்புதான். இருந்தாலும் அவருக்கு ஒரு விஷயத்தில் நாம் அனைவரும் ‘ஓ’ போட வேண்டும். எதற்கு?

என்றும் இணையாத, என்றும் சேராத இரு துருவங்களாகவே இருந்து வந்த திராவிட கழகத்தையும் ஆர்எஸ்எஸ்., இந்து மக்கள் கட்சிகளையும் இந்த விஷயத்தில் கைகோர்க்க வைத்தது நல்ல விஷயம்தானே.

அதற்காகத்தான் ‘ஓ’ போட சொன்னேன்.

செவ்வாய், நவம்பர் 24, 2009

கலைஞர் தீர்க்கதரிசி

0 கருத்துகள்
இன்று நடப்பதை அன்றே தன் வசனத்தில் எழுதியிருந்தார் கலைஞர். அவர் ஒரு தீர்க்கதரிசிதானே.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கலைஞரின் வசனம்

காஞ்சிபுரம் ஐயருக்கு சமர்ப்பணம் ஆக்குகிறேன்.

கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

கடவுள் பக்தர்களும் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால்.

வியாழன், அக்டோபர் 01, 2009

சிங்காரி சரக்கு

3 கருத்துகள்












சரக்கும்.. இருக்கு

நீண்ட நாட்களாக ப்ளாக்கில் எதுவும் போடவில்லையே. ஏன்? நிறைய பேர் கேட்டார்கள்.

சரக்கு இல்லாமல் எதை போடுவது என்று யோசித்திருக்கையில்....

இதோ ஒரு அறிவிப்பு

"டாஸ்மாக்' கடைகளில் இன்று (01.10.09) முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது.

58, 59, 67 ரூபாய் என்று விற்கும்போது, மீதி சில்லரையை விற்பனையாளர்கள் கொடுப்பதில்லை என்ற பிரச்னை சமாளிக்கும் வகையில் "ரவுண்ட்' செய்து விற்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் பெருகும்.

" பழைய விலையும் (புதிய விலையும்)
குவார்ட்டர் ரேட்
எம்.சி., பிராந்தி ரூ.67 (70)
ஓல்டு மங்க் ரூ.59 (60)
ஹனிடே ரூ.58 (60)
ஓல்டு மாஸ்டர் ரூ.58 (60)
டாப் ஸ்டார் ரூ.58 (60)
எஸ்.என்.ஏ., ரூ.67 (70)
மேன்சன் ஹவுஸ் ரூ. 77 (80)
கார்டினல் ரூ.68 (70)

பீர்:
கல்யாணி ரூ.67 (70)
மார்க்கோ போலா ரூ.58 (60)
கிங் பிஷர் ரூ.62 (65)
பிளாக் நைட் சூப்பர் ஸ்டிராங் ரூ.58 (60)
ஓரியன் சிக்ஸ் தவுசண்ட் ரூ.61 (65)

எப்படி நம்ம சரக்கு...

புதன், ஜூலை 15, 2009

சரிசெய்யப்பட்ட இரும்பு தூண்

1 கருத்துகள்



















நேற்று கேபிள் ஓயரில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு தூண் பற்றி புகைப்படம் வெளியிட்டிருந்தேன். இன்று காலை செல்லும்போது பார்த்தேன். தமிழ்நாடு மின்சார வாரியம் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு புதிய இரும்பு தூணை அமைத்ததோடு பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் பெரும் ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளது. மிக வேகமாக செயல்பட்டு பழுதை சரிசெய்த மின்சார வாரியத்திற்கு நன்றி. இதுபோல் மின்வெட்டையும் சீர் செய்தால் நன்றாக இருக்கும்.

செவ்வாய், ஜூலை 14, 2009

இரும்புத் தூண்

1 கருத்துகள்
இன்று காலை நான் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது மந்தவெளி ஸ்கூல் வியூ ரோட்டிலுள்ள ‘சிகப்பி ராமசாமி தொடக்கப்பள்ளி’யின் அருகில் உள்ள இரும்பு தூண் உடைந்து கேபிள் ஒயரில் தொங்கிக்கொண்டிருந்தது. அதனை என் செல்போனில் படம் பிடித்தேன். (படம் கீழே) பள்ளிக்கு அருகிலுள்ள இந்த உடைந்த தூணை உடனே அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.
















சனி, ஜூலை 11, 2009

என்ன கொடுமை சார்?

4 கருத்துகள்














கோபக்காரன்

ராபர்ட்.

அதிகாலையிலேயே எழுந்துவிடுவான்.

என்றும்போல அன்றும் எழுந்துவிட்டான். யாரும் அவனை கவனிக்கவில்லை. அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

உம்மென்று இருந்தான்.

கொஞ்சம் சத்தம்போட்டு பார்த்தான் அப்போதும் யாரும் அவனைக் கவனிக்கவில்லை. கோபம் அதிகமானது.

டட்... டட்... டட்...

பக்கத்திலிருந்த கதவைப் பிடித்து தள்ளினான். கதவு சத்தம் கேட்டும் யாரும் அவனைக் கவனிப்பதாக இல்லை. கோபம்
இன்னும் அதிகமானது.

கீழே கிடந்த கால்மிதியடியில் தன் கோபத்தைக் காண்பிக்க ஆரம்பித்தான்.

கால்மிதியடி அவனிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டது. கடைசியில் அதை துண்டு துண்டாக கிழித்தே விட்டான்.
அப்படியும் யாரும் கவனிக்காததால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா மணியை தற்செயலாகப் பார்த்தார். அவருக்கும் கோபம் வந்தது. ‘டேய்... டேய் என்னடா பண்ணுற ராஸ்கல். ஏய் மங்களம். முதல்ல இங்க வா. இங்க வந்து இவன முதல்ல கவனி அப்பதான் இவன் சும்மா இருப்பான். இல்லன்னா கத்திக்கிட்டேயிருப்பான். சீக்கிரம் வா.’

அப்பாவின் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து அம்மா, ‘இதோ வந்துட்டேன். அவனுக்காகத்தான் தயார் பண்ணிட்டிருந்தேன். அதுக்குள்ளே அவனுக்கு அவசரம். நான் என்ன பண்ணுறது? டேய்... அம்மா வர்றதுக்குள்ளே என்னடா அவசரம்? ஏன் இப்படி ரகளை பண்ணுற? ஒருநாளைக்கு பொறுத்துக்க மாட்டியா என்ன?’

சத்தம் போட்டுக் கொண்டே வந்த அம்மாவைப் பார்த்ததும் செல்லமாய் சிணுங்கிக்கொண்டே படுத்தான் ராபர்ட்.

அம்மா பாலை ஊற்றினாள். ராபர்ட் அதை மடக் மடக்கென்று வாலை ஆட்டிக்கொண்டே நக்கி சாப்பிட ஆரம்பித்தான்.

மங்களம் அந்த வாயில்லா ஜீவனை தடவிக்கொடுத்தாள்.

வெள்ளி, ஜூன் 05, 2009

மலரும் நினைவுகள்

2 கருத்துகள்
தூர்தர்ஷன்

சில விஷயங்களை நாம் எவ்வளவு நினைத்தாலும் மறக்க முடியாது. நம் மனத்தில் ஆழத்தில் அழுத்தமாக பதிந்திருக்கும். சிறுவயதில் என்னைக் கவர்ந்த இசையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

அந்த இசை என் மனத்தை ஏதோ செய்தது. அப்போதும், இப்போதும். அது எந்த இசை என்றால் தூர்தர்ஷன் தொடங்க இசைதான். 

ஆம் நாளுக்கு நாள் ஒரு தொலைக்காட்சி ஒன்று புதிதாக வந்துகொண்டே இருக்கும் இந்த காலத்தில், எத்தனையோ தொலைக்காட்சிகள் வந்திருந்தாலும், நான் முதன்முதலில் பார்த்து ரசித்தது சென்னை தொலைக்காட்சியைத்தான். 

அதிலும் தொலைக்காட்சி தொடங்கும்முன் கொய்ங்............ என்று ஒரு சத்தம் வந்துகொண்டிருப்பதில் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக தொலைக்காட்சி தொடங்குவதற்காக அந்தக் கால தூர்தர்ஷன் எம்பளம் சுழன்றுகொண்டே தொடங்க இசை வரும். அந்த இசையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சிறுவயதி்ல் என் மனதை நெருடி, வருடி ஏதோ செய்தது இன்றைக்கும் என் நினைவில் இருக்கிறது. அந்த இசையை இப்போது கேட்டாலும் ஆனந்தமாகதான் இருக்கும். 

ஆனால் தூர்தர்ஷன் இப்போதெல்லாம் அந்த இசையை காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே அந்த இசைக்காட்சியைப் பார்க்காதவர்களுக்காக, கேட்காதவர்களுக்கோ, இதோ...

வியாழன், ஜூன் 04, 2009

‘லூசுத்தனமாப் பேசாத’, ‘லூசாட்டம் பண்ணாத’

2 கருத்துகள்
















பைத்தியக்கார உலகம்


யாராவது உங்களைப் பார்த்து பைத்தியம் என்றால் உங்களுக்குக் கோபம் வருமா? வராதா?

அப்ப வராதா? என்று கேட்காதீர்கள். கண்டிப்பாக வர வேண்டும். அப்படி கோபம் வரும் என்றால் இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

உலகில் எங்காவது ஓர் மூலையில் யாராவது ஒருவர் பைத்தியக்காரத்தனமானச் செயல்களைச் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு முன்னரும் இருந்திருக்கிறார்கள். உலகப் புகழ் பெற்றவர்களும் அடங்குவர்.

உலகின் மகா கிறுக்கன்கள் சிலரைப் பற்றி பார்ப்போமா?

நாம் எதைச் சாப்பிட்டாலும் நான்கைந்து முறை மென்றுவிட்டு உணவை முழுங்கிவிடுவோம். ஆனால், ஒருவர் சாப்பிடும்போது வாய்க்கு உணவு போனவுடன் ஒரு பல்லுக்கு முறையென 32 முறை மென்றபிறகே முழுங்குவாராம். இப்படி ஒரு வாய் உணவிற்கு மட்டும் இந்தச் செயலைச் செய்ய மாட்டாராம். ஒவ்வொரு வாய் உணவிற்கும் அவரின் செய்கை இருக்குமாம். அவர் யார் தெரியுமா? இங்கிலாந்தில் நான்கு முறை பிரதம மந்திரியாக இருந்த வில்லியம் கிளாடுஸ்டோன் என்பவருக்கு தான் இந்த விநோதமாக பழக்கம் இருந்திருக்கிறது.

நியுயார்க்கிலுள்ள ஓர் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தவர் ஆதர்ஸ்ட் பெல்மார். இவருக்கு சிறுவயதிலிருந்தே குதிரை பைத்தியம். குதிரை என்றால் போதும் உலகையே மறந்துவிடுவாராம். தனது பிள்ளைகளைக் காட்டிலும் குதிரையின் மேல் அன்பை அதிகம் பொழிந்தாராம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எப்படி? குதிரைகள் தூங்குவதற்காக வீட்டுக்குள்ளேயே படுப்பதற்கு மெத்தை, நான்கு கால்களுக்கு தலையணை என சகல வசதிகளையும் குதிரைகளுக்கு செய்து கொடுத்திருக்கின்றார்.

பென்ரோஸ் ஒரு அமெரிக்கப் பெண்மணி. இவர் எப்படியென்றால் நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி போல எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு சமயம் அமெரிக்காவில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னல் என பயங்கரமான மழையில் இவரது வீடு பலத்த சேதமுற்றது. பென்ரோஸுக்கு பயங்கரமான கோபம் வந்தது. மழை நின்றவுடன் நீதிமன்றத்திற்கு நேராகச் சென்று திட்டமிட்டே தனது வீட்டை சேதப்படுத்தியதாக கடவுள்மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். நஷ்ட ஈடாக ஒரு லட்சம் டாலரும் கேட்டிருந்தார். 1969ம் வருடம் போடப்பட்ட இந்த கேஸ் தள்ளுபடியானது.

உலகப் புகழ் பெற்ற ஓவியர் சல்வடார் டாலி. இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். லண்டனில் ஒரு ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்க வேண்டுமென்று கண்காட்சியை நடத்துபவர்கள் இவரிடம் கேட்டிருந்தனர். இவரும் வருகிறேன் என்றார். விழா நாளும் வந்தது. கண்காட்சியை நடத்துபவர்கள் இவரை வரவேற்க வாயிலில் காத்திருந்தனர். கார் வந்தவுடன் விழாக் குழுவினர் காரினருகே வந்து வரவேற்க தயாரானார்கள். கார் கதவு திறக்கப்பட்டு, டாலி நீச்சல் உடையில் வந்திறங்கினார். எல்லோருக்கும் அதிர்ச்சியடைந்தார்கள். அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத டாலி “இந்த உலகம் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும்என்று சொன்னாராம்.

இதுபோல் உலகில் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும், பல்வேறு விதமான பைத்தியங்கள் இருந்திருக்கிறார்கள். ‘பைத்தியக்கார உலகமடா’ என்பது சரியாகத்தான் இருக்கிறது.

சரி. இனிமேலாவது, ‘போடா லூசு’, ‘லூசுத்தனமாப் பேசாத’, ‘லூசாட்டம் பண்ணாத’ என்று யாராவது சொன்னால் யோசித்துக் கோபப்படுங்கள்.


செவ்வாய், மே 12, 2009

அன்னையும் அம்மாவும்

0 கருத்துகள்














அதிக பங்கு யாருக்கு?

உலகிலுள்ள சில தமிழ் அமைப்புகளால் இன்று ‘ஈழத்தாய்’ என்றழைக்கப்படும் செல்வி ஜெயலலிதா. இதுவரை ஈழத்திற்காகவும், ஈழத்தில் வாழும் மக்களுக்காகவும், ஈழத்திற்காக போராடும் புலிகளுக்காகவும் என்ன செய்துள்ளார்? என்பதை முதலில் விளக்க வேண்டும். இல்லை யோசித்து பார்க்க வேண்டும்.

இன்று நான் தனி ஈழம் வாங்கித் தருவேன் என்று முழங்கியதால் மட்டுமே அவர் ஈழத்தாய் என்றழைக்கப்பட்டது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது.

ஈழப் பிரச்னையில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று முதலில் கூறியதே செல்வி ஜெயலலிதாதான். அதன்பின்தான் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தது.

விடுதலைப் புலிகள் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியவர் ஜெயலலிதா.

தமிழகத்தில் சுப்பிரமணிய சுவாமி, சோ, ஜெயலலிதா இந்த மூவரும் எப்போதும், எந்நேரமும், அவ்வளவு ஏன் தூங்கிக் கொண்டிருக்கும்போது இவர்களை எழுப்பிக் கேட்டாலும் ‘என்னைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருக்கின்றனர்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதில் செல்வி மட்டும் தற்போது ஈழத்தை அமைத்தே தீருவேன் என்றும், அதற்காக எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவது வேடிக்கை. ஏமாற்று வேலை. மோசடி வேலை.

அப்படியே அம்மையார் 40 தொகுதியிலும் ஜெயித்தால்கூட எப்படி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவார்? ஏதோ பன்னீர்செல்வத்தையும் ஜெயகுமாரையும் அனுப்புவதுபோல சொல்லிக்கொள்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அதிமுக கட்சி மந்திரிசபையில் இடம்பிடித்தது. அப்போதும் தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சிதான். அதனை கலைக்க வேண்டுமென்று பிரதமர் வாஜ்பாயை மிரட்டினார். ஆனால் வாஜ்பாயை மசியவில்லை. உடனே ஆதரவை வாபஸ் பெற்றார். விளைவு 11 மாதத்திலேயே அடுத்த தேர்தலை சந்தித்தது. இப்போது வெற்றி பெற்றாலும் அதுதான் நடக்கும்?

ஈழப் பிரச்னைக்காக ஒன்றும் செய்துவிட போவதில்லை. ஈழப் பிரச்னையில் இப்போது முக்கியப் பங்கு வகிப்பவராக கூறப்படும் சோனியா காந்தி. சோனியா காந்தியாவது ராஜீவ் காந்தி கொலைக்குப் பழிவாங்குகிறார் என்று அனைவரும் கூறுவதுபோல் வைத்துக்கொண்டாலும்கூட, இத்தனை நாள்கள், இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதா எதற்காக விடுதலைப் புலிகளையும், ஈழப் பிரச்னையையும் கண்டுகொள்ளாமல் பழிவாங்கினார் என்பதை அனைவரும் உணர தவறிவிட்டனர்.

ஈழப் பிரச்னையில் சோனியா காந்தியின் பங்கு இருக்கிறது என்று நம்பும் மக்களே, சோனியாவின் பங்கைவிட ஜெயலலிதாவின் பங்கு அதைவிட கூடுதலாகவே இருந்திருக்கிறது. இருக்கிறது. இருக்கப்போகிறது என்பதையும் நம்புங்கள்.

இதுவரை ஈழப் பிரச்னையில் துரோகம் இழைத்தவர் என்று பார்க்கும்போது அதிக பங்கு வகித்தவர் என்றால் சோனியாவைவிட ஜெயலலிதாதான் முன்னிலையில் இருப்பார்.

திங்கள், மே 11, 2009

தமிழர்களே இவர்களை மன்னியுங்கள்!

3 கருத்துகள்












புதிய அதிமுக கொ.ப.செ.கள்


சீமான் ராமேஸ்வரத்தில் இலங்கைப் பிரச்னையில் பேசியதிலிருந்து அவருடைய பேச்சை இணைய தளத்தில் தேடிக் கண்டுபிடித்து கேட்பேன். அவர் உணர்வுபூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசுவதைக் கண்டு என் ரத்தமும் உணர்வும் வெகுண்டெழும்.

பாரதிராஜா தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் தேர்தலில் இந்திரா காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.

சீமான் பேச்சை நேற்று நான் ஜெயா டிவியில் கேட்டேன். சீமான் இத்தனை நாள்கள் இலங்கைப் பிரச்னைகளை பேசும்போது உணர்வும் உணர்ச்சியும் இருந்த அவரது பேச்சு. நேற்று அவர் பேச்சைக் கேட்குமபோது எனக்கு ஏற்படவில்லை. காரணம் அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே மாறியிருந்தார் என்று சொல்லலாம். பேச்சில் வரி வரிக்கு இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள். இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.

பாரதிராஜா இவர் சமீப ஆண்டுகளாக தமிழ் மேலும், தமிழினத்தின் மேலும் இவருக்கு புதுசா உணர்வு பிறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று வாய்கிழிய என் தமிழன், என் தமிழினம் என்று பேசும் இவர் 1983 இலங்கைப் பிரச்னை நடைபெற்றபோது வாய் மூடி மவுனியாக இருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

இவர்கள் செய்வது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இத்தனை வருடங்களாக விடுதலைப் புலிகளினால் எனக்கு ஆபத்து, பிரபாகரனை இங்கு அழைத்து வந்து தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று பேசியதோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை போடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்பதை இவர்களுக்கு தெரியுமா? அல்லது தெரியாதா? சாகப் போகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்பதுபோல இத்தனை ஆண்டுகள் எதுவும் பேசாமல் இப்போது தீடீர் ஞானோதயம் வந்ததுபோல் தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்பது ஓட்டுக்காக என்பது பாரதிராஜா, சீமானுக்கு போன்ற சிறந்த இயக்குநர்களுக்கு விளங்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆன கதைதான் ஞாபகம் வருகிறது. இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தமிழர்களே இவர்களை மன்னியுங்கள்!

செவ்வாய், மே 05, 2009

தேர்தல் பச்சோந்திகள்

0 கருத்துகள்











அடையாளம் கண்டு கொள்ளுங்கள்

ஜெயலலிதாவை கலைஞர் குறை கூறுவதும், 

கலைஞர் ஜெயலலிதாவை குறை கூறுவதும் 

என்றும் மாறிவிடப் போவதில்லை. தொடர்ந்துகொண்டேதான் இருக்கப் போகிறது? இருக்கும்.

கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலின்போது கலைஞருடன் கைகோர்த்து, அதிமுகவையும், ஜெயலலிதாவையும் பாமக ராமதாஸும், இடது கம்யூனிஸ்ட் தா. பாண்டியனும் கடுமையாக விமர்சித்தனர். 

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து கொண்டு கலைஞரை மானவாரியாக திட்டி தீர்க்கின்றனர். இவர்களை தான் நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவர்கள் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, தேர்தல் பச்சோந்திகள். 

தேர்தலுக்கு தேர்தல் தங்களது நிறத்தை, கூட்டணியை மாற்றிக் கொள்(ல்)வார்கள். கேட்டால் எங்களது கொள்கையிலிருந்து நாங்கள் மாறவில்லை என்பார்கள். இவர்களது உண்மையான கொள்கை என்பதே தேர்தலில் வெற்றி பெறும் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வதுதான். ஏனென்றால் இவர்களெல்லாம் தனித்து நின்றால் டெபாசிட் இழந்து தோற்றுவிடுவார்கள். அந்த பயம்தான் காரணம். இந்த விஷயத்தில் விஜயகாந்தை பாராட்டலாம்.

தா. பாண்டியன் திமுகவுடன் சென்ற தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டதே பெரிய விஷயம்தான். ஏன் தெரியுமா? அவர் தனியாகக் கட்சியை நடத்தி ஜெயலலிதாவுக்கு ஏற்கெனவே குடை பிடித்தவர்தான். அப்போதெல்லாம் இலங்கைப் பிரச்னை பற்றி இவரும் சரி, அம்மையார் ஜெயலலிதாவும் சரி பேசியதே இல்லை. இப்போது இருவருமே வாய்கிழிய பேசுகிறார்கள்.

ராமதாஸ் தமிழக அரசும், மத்திய அரசும் இலங்கைப் பிரச்னையில் ஒன்றும் செய்யவில்லை என்று ஆறு மாதங்களுக்கு மேலாகவே சொல்லிக் கொண்டேயிருக்கிறார். கேட்டால் திமுகவை குறைகூறுகிறார். இவரும் தானே மத்திய அரசில் பங்கு வகித்தார். ஆனால் இவருடைய கட்சி அமைச்சர்கள் இலங்கைப் பிரச்னையில் எதுவும் செய்ய மாட்டார்களாம். திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமாம். இது எந்தவிதத்தில் நியாயம்? தனது மகனுக்காக அதிமுகவிடம் புதுவை ராஜ்யசபா பதவி வாங்க நினைத்தார் ராமதாஸ். ஏமாந்தார். அதன்விளைவு திமுக பக்கம் ஓடிவந்தார். கலைஞர் சொன்னதை செய்தார். மகிழ்ந்தார் ராமதாஸ். மகனுக்கு அமைச்சர் பதவியும் வாங்கிக்கொண்டார். இப்போது இவரும் இவரது மகனும் ராஜ்யசபா பதவி திமுக கொடுத்ததல்ல என்று பேசுகிறார்கள். கலைஞரும் ஜெயலலிதாவைபோல் ஏமாற்றியிருக்க வேண்டும். இதுதவிர கம்யூனிஸ்ட் கிடைக்க வேண்டிய பதவியையும் இவர் கேட்டார். யாருக்காக தெரியுமா? தனது உறவினரான காடுவெட்டி குருவுக்கு. காடுவெட்டி குரு இவரெல்லாம் அங்கு போய் என்ன செய்யப் போகிறார்? மரம் வெட்டவா போகிறார்? தமிழைப் பற்றி பேசும் இவர், தொடர்ந்து தமிழில் திக்காமல் பேசச் சொல்லுங்கள். இவருடைய மகனையும் பேச சொல்லுங்கள் பார்க்கலாம். சரி போகட்டும் விடுங்கள். இவரது கூட்டணித் தலைவியையாவது எழுதி வைக்காமல் பேச சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது.

நன்கு பேசத் தெரிந்த ஒரே ஒருவர் வைகோதான். அவரையும் இவர்கள் அசிங்கப்படுத்தி, அவமதித்து அடக்கிவிட்டனர். பாவம் வைகோ. சிங்கம் போல் கர்ஜிப்பவர் இன்று பூனை போல் சத்தமிடுகிறார்.

கலைஞர் ஜெயிக்கட்டும், ஜெயலலிதாவும் ஜெயிக்கட்டும் , ஏன் விஜயகாந்த் கூட ஜெயிக்கட்டும். ஆனால் ராமதாஸ், தா. பாண்டியன் போன்றோர்கள் ஜெயிக்கலாமா? பச்சோந்திகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

திங்கள், மே 04, 2009

பேருந்து கட்டணம் - சரியா? தவறா?

3 கருத்துகள்














மாத்தி யோசியுங்க!

பேருந்து கட்டண விவகாரம் வரலாற்று மோசடி என்று பாமக நிறுவனர் டாக்டரய்யா கூறியிருக்கிறார்.

டாக்டரய்யா அவர்களே!  இது ஏமாற்று வேலை என்று சொல்கிறீர்கள்? 

அதனாலென்ன? 

இருந்துவிட்டு போகட்டும். எத்தனையோ முறை தேர்தலில் வாக்களித்து ஏமாறவில்லையா? அதுபோல் எண்ணிக் கொள்கிறோம்.

ஓட்டுக்காக பேருந்து கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்?

தேர்தல் நேரத்தில் கிடைத்த இந்தச் சலுகை என்றாலும் ஏழை, நடுத்தர  மக்களுக்கு உபயோகமான, பயனுள்ள சலுகையாக இருக்கிறது. இது தங்களைப் போன்று குளுகுளு காரில் செல்லும் தலைவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை?

இப்போது அமைதியாய் இருந்துவிட்டு, தேர்தல் முடிந்தபின்பு மீண்டும் பேருந்து கட்டணத்தை ஏற்றும்போது நீங்களும், உங்கள் கூட்டணித் தலைவர்களும் குரல் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

ஓட்டுக்காக ஏழை, நடுத்தர மக்களுக்கு வழங்கிய சலுகையினை வெட்டவெளிச்சமாக்கி சலுகை கிடைக்காமல் செய்துவிட்டீர்கள். 

இனியாவது மாத்தி யோசியுங்க!

சனி, மே 02, 2009

பெண்ணே கவனம்

4 கருத்துகள்



















இறைவனே கூறு

புண்ணிய பூமியிது
புனித பூமியிது - இன்று
புண்ணியமும் இல்லை
புனிதமும் இல்லை

பாலில் தண்ணீர்
சர்க்கரையில் ரவை
அரிசியில் கல் - போலிகள்
களைபோல் வளர்ந்து
ஆல்போல் நிற்கிறது

தேன் கூட்டிற்கு நெருப்பாய்
மான் கூட்டத்தில் நரியாய்
சிவபூஜையில் கரடியாய்
இவர்கள் நுழைந்தார்களோ?

வார்த்தை ஜாலங்கள்
வண்ண வண்ண மலர்கள்
வசதியான ஆசனங்கள்
வசீகரமான பார்வைகள்

கடவுளின் சீடரென்றும்
கடவுளே தானென்றும் - இதில்
பொய்யில்லை யென்பார்
புரட்டுமில்லை யென்பார்
பொழுது சாய்கையிலோ
புரட்டி எடுத்திடுவார்
கன்னிப் பெண்களை
கடவுளின் பெயரால்

சிறியப் பெண்ணைப் பார்க்கையில்
சிங்காரமாய் சிரித்திடுவார்
மந்திரம் என்ற 
தந்திரச் சொல்லைக் கூறி
மஞ்சத்தில் கிடத்தி
நெஞ்சத்தில் அணைத்திடுவார்

பெண்களே!
இறைவனின் பெயர் சொல்லி
அழைப்பவர்களிடம்
இதயத்தை பறிகொடுத்து
இரக்கமற்ற பாவிகளிடம்
இழந்துவிடாதீர்கள் கற்பை

இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாறுவீர்கள் பெண்களே
இனியாவது விழித்திடுங்கள்
இறைவன் மனதில் இருக்கிறான்
மனதை ஆழப்படுத்திப் பார்
மகத்தான ஒளியில் தெரிவான்

இறைவனுக் கெதற்கு
ஏஜென்ட்?

இனியாவது
எச்சரிக்கையா யிருங்கள்
சாமியார்களிடம்

இவ்விஷயத்தில் மட்டும்
மதங்களின் ஒற்றுமை
ஏன்?

இறைவனே 
பதில் கூறு

வியாழன், ஏப்ரல் 30, 2009

முதலைகள்

0 கருத்துகள்
நிஜ முதலைகள்

இலங்கைப் பிரச்னை, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் செய்திகள், கலைஞரின் உண்ணாவிரதம், ஜெயலலிதாவின் ஈழம் இவற்றையெல்லாம் மாற்றி மாற்றி தொலைக்காட்சியில் பார்த்து மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்றே தோன்றியது.

இனி தமிழ் சேனல்களைப் பார்க்கக் கூடாது. (தேர்தல் முடியும் வரைதான்) என்று எண்ணி சேனல்களை மாற்றத் தொடங்கினேன். டிஸ்கவரி சேனல் வந்தது. சரி இதையும்தான் பார்க்கலாமே என்று எண்ணி, சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

முதலைகளைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள். முதலை எப்படி வாழ்கிறது என்பதைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். நான் பார்க்கும்போது முதலைகள் தனது உணவிற்காக தண்ணீர் பாய்ந்து ஓடும் நதியில் செல்கின்றன. அங்கே பாறைகளிலிருந்து கொட்டி கொண்டிருக்கும் நீருக்கு அருகில் சென்று காத்துக் கொண்டிருக்கின்றன. வேகமாக வரும் தண்ணீரில் மிதந்து வரும் மீன்கள் துள்ளிக் குதிக்கும்போது அதனை லாகவமாகப் பிடித்து, கடித்து சாப்பிடுகின்றன. மீன்களைப் பிடிக்கும் முதலைகள் மீன்கள் துள்ளி மீண்டும் தண்ணீரில் குதிக்காமல் எப்படி சாப்பிடுகின்ற காட்சி பார்த்து ரசித்தேன்.
தான் இடும் முட்டைகளை மண்ணைத் தோண்டி பள்ளத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன முதலைகள். முட்டையை உடைத்துக் கொண்டு வரும் குட்டி முதலைகள் (முட்டையிலிருந்து வந்தால் காக்கா குஞ்சு, கிளிக் குஞ்சு என்கிற முதலைக் குஞ்சு ஏன் சொல்லக்கூடாதா?) வரும் நேரத்தை கணித்து அங்கும் வரும் பெரிய முதலை மண்ணைச் சீரமைக்கின்றது. பின்னர் முதலைக் குட்டி பெரிய முதலையின் வாயருகில் வந்ததும், குட்டி முதலையை தன் வாயில் கவ்வி (பற்கள் படாமல்) தூக்கிச் சென்று தண்ணீரில் விடுகின்றன. இப்படியாக ஒவ்வொரு குட்டிகளாக எடுத்துச் செல்கின்ற முதலை. உடையாத முட்டைகளை ஒவ்வொன்றாக தன் வாயில் கவ்வி தண்ணீருக்கு செல்கின்றது. நீரில் இறங்கிவுடன் முட்டை உடையாமல் முட்டையை சுத்தமாக கழுவுகின்றது. இதற்கு பிறகுதான் நிகழ்வதுதான் ஆச்சர்யமாக இருக்கின்றது. டாக்டர்கள் சிசேரியன் செய்து குழந்தைகளை எடுப்பதுபோல, முதலை வாயில் இருக்கும் முட்டையை உடைக்கின்றது. உள்ளேயிருக்கும் குட்டிக்கு எதுவும் ஆகாமல் உடைக்கின்றது. முட்டை உடைந்ததும் அதனுள்ளே இருக்கும் குட்டியை தண்ணீரில் மிதக்க விடுகின்றது. இதனைப் பார்க்க பார்க்க சிலிர்த்து போனேன்.


அரசியல் முதலைகளை காணும் இந்த நேரத்தில் நிஜ முதலைப் பற்றித் தெரிந்துகொண்டது மனதுக்கு மகிழ்ச்சியளித்தது.

செவ்வாய், ஏப்ரல் 21, 2009

எது இன்பம்?

0 கருத்துகள்













இலக்கிய இன்பம்

இன்பத்துள் இன்ப மெது இன்பம் -இவ்
வையத்து பிறப்ப தென்பது பேரின்பம்
குழந்தை பருவ மதுவே ஆனந்தம்
குமரனா னதும் கன்னியி னின்பம்
கடவுளை காண்ப தென்பது பக்தின்பம்
கண்டதும் கேட்பது வரமென் னுமின்பம்
நித்திரையி லிருப்பதே ஒருவகை இன்பம்
நிலாமுகத் தாளருகினில் சுகம் இன்பம்
பச்சை புற்களில் படுப்பது தனியின்பம்
பருவத்தால் நாணுவது வெட்க மின்பம்
கல்லூரி படிப்பி னிடையில் காதலின்பம்
கற்பனைக் கெட்டிய வரையவளே இன்பம்
முத்தத்தால் பசித்தோம் சுவை யின்பம்
முடிவினிலே கிடைத்த தென்னவோ தனியின்பம்
இங்ஙனம் இன்பத்துள் இன்பம் வந்தாலும்
இலக்கியமே இன்பம்

ஞாயிறு, ஏப்ரல் 19, 2009

எதிரிகள் ஜாக்கிரதை

4 கருத்துகள்













காலில் விழுந்தது ஏன்?

திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை கலைஞர் தொலைக்காட்சியில் கண்டேன்.

கூட்டத்தில் பார்வர்டு பிளாக் சந்தானம், திருப்பூர் அல்தாப், பசீர் அகமது, எஸ்ரா சற்குணம், பு.தா. இளங்கோவன்,  பொன். குமார், ஆகியோர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசினார்கள். அனைவரும் அருமையாக பேசினார்கள். பொன். குமாரும், பசீர் அகமதும் இத்தனை ஆண்டுகள் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தவர்கள். நேற்றுதான் திமுகவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொன். குமார் பேசும்போது தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு வந்ததற்கு காரணமே கடந்த முறை ஆண்ட அதிமுகதான். காரணத்தையும் அவரே சொன்னார். ‘அதிமுக ஆட்சியில் மின்சார உற்பத்தி திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வந்ததில்லை என்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் இணைப்புதான் கொடுத்தென்றும், தற்போதைய திமுக ஆட்சி வந்த பிறகு ஒரு ஆண்டு 5 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஆக மூன்றாண்டுகளில் 15 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தபடி நிறைய தொழிற்சாலைகள் உருவாகின. இதனால் தான் மின்சார தட்டுபாடு ஏற்பட்டது. இனி கவலை வேண்டாம் வடசென்னை, உடன்குடி, தூத்துகுடி போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன மின்சார தட்டுபாடு வராது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு வந்த இந்திய பிரஸ் குழுவின் தலைவர் ரே ‘தமிழ்நாடு போல எல்லா மாநிலங்களும் கருத்துரிமை சுதந்திரம் கொடுத்தால் இந்தியா மேலும் முன்னேறலாம்’ என்று கூறினார் என்று பேசினார்.

சுப. வீரபாண்டியன் பேசும்போது இலங்கைத் தமிழருக்காக உண்மையான உணர்வுடன் இருப்பவர் கலைஞர். அவரால் மட்டும்தான் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் பேசும்போது, அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அண்ணாவின் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

கி. வீரமணி அதிமுகவின் சென்ற முறை தேர்தல் அறிக்கையையும் இந்த தேர்தல் அறிக்கையையும் கையில் வைத்துக்கொண்டு பேசினார். ஜெயலலிதா ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒன்றைச் சொன்னார். இப்போது ஒன்றை சொல்வார். நாளை ஒன்றை கூறுவார். திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தான் இப்போது இந்தியா பின்பற்றுகிறது என்று கூறினார்.

கூட்டத்தில் ‘வெற்றி நமதே’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டது. அதிலுள்ள எட்டு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

ஒன்று ‘அழகிய திருமகன்’ படத்தில் வரும் ‘உன்னால் முடியும் உன்னால் முடியும் வாடா’ பாடலின் மெட்டில் அமைந்திருந்தது. மற்றொன்று ‘நாக்கு முக்கா’ பாடல் மெட்டில் அமைந்திருந்தது. இரண்டாவது பாடலுக்கு தொண்டர்களிடையே பலத்த வரவேற்பு. நிறைய தொண்டர்கள் எழுந்து ஆட ஆரம்பித்தனர். வயதான கிழவர் ஒருவரும், பெண்மணியும் கூட எழுந்து ஆட ஆரம்பித்தார்கள். நாக்கு முக்கா மெட்டுப் பாடலைக் கேட்டு மேடையில் மு.க. அழகிரி அருகில் அமர்ந்திருந்த தயாநிதி மாறன் சிரித்துக்கொண்டே ரசித்தார்.

பின்னர் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் பேசும்போது, இன்றைக்கு தலைவர் கலைஞரின் தேர்தல் அறிக்கையைத்தான் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் காப்பியடிக்கின்றது. ஆந்திராவில் புதிய கட்சித் தொடங்கிய சீரஞ்சிவிகூட தலைவர் கலைஞரின் அறிக்கையைத்தான் பின்பற்றுகிறார். ஒரு ரூபாய் இந்தியா முழுதும் பேசுவதற்கு வழிவகுத்தது மன்மோகன் சிங் அரசு. எல்லோருடைய கையிலும் வாட்ச் இருக்கிறதோ இல்லையோ? கண்டிப்பாக செல் இருக்கும். எனவே உதயசூரியன், கை சின்னத்திற்கு ஒட்டு போடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் சிதம்பரம்தொகுதியின் வேட்பாளருமான தொல். திருமாவளவன் பேச வந்தார். ‘அதிமுக தலைவர் ஜெயலலிதா கூட்டணி தலைவர்கள் வந்தால் அவர்களுக்கு மனிதாபிமான முறையில் கூட மதிப்பதில்லை. திருமாவளவன் தவறான கூட்டணியில் சேர்ந்துவிட்டார் என்று சொல்லும் பாமக நிறுவனர் அய்யா அவர்கள், செல்வி ஜெயலலிதாவை பார்க்க சென்றார். ஜெயலலிதா வெளியில் நின்று வணக்கம் சொல்வார். இவரும் பதிலுக்கு வணக்கம் சொல்வார். இருவருக்குமிடையே இடைவெளி அதிகம் இருக்கும். பக்கத்தில் நிற்க முடியாது. நின்றால் அவ்வளவுதான். ஆனால் தலைவர் கலைஞர் அப்படியில்லை. எழுந்து வந்து வரவேற்று, நலம் விசாரித்து, தேநீர் கொடுத்து உபசரிப்பார். இதோ கலைஞருக்கு அருகில் எப்போதும் அமர்ந்திருக்கும் அன்பழகனார் போல் கூட்டணித் தலைவர்கள் அமரலாம். ஆனால் அங்கு? தொகுதியில் பங்கீட்டில் 21 வயதான இளைஞன் 2 குழந்தைகள் பெற்று 16 செல்வங்களோடு சிறப்பாக வாழ்வதுபோல தொகுதியைப் பங்கீட்டுள்ளார். 21 வயது இளைஞன் திமுக, 2 குழந்தைகள் விடுதலை சிறுத்தைகள், 16 செல்வங்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள், முஸ்லிம் லீக் 1 ஒரு தொகுதி கொடுத்ததற்கு விளக்கம் தந்தார். ஈழத் தமிழரின் பிரச்னைகள் இந்தக் கூட்டணியில் தான் ஒருமித்த கருத்து இருக்கிறது. திமுகவும் சரி, விடுதலை சிறுத்தைகளும் சரி, காங்கிரஸும் சரி ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும் என விரும்புகின்றனர். அந்தக் கூட்டணியில் ஆளுக்கொரு கருத்தைக் கொண்டுள்ளனர். நாங்கள் ஒன்றும் புதிதாக ஈழத்தைப் பற்றி பேசவில்லை. என்று பேசினார்.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலுபேசியபோது, கலைஞரை நம்பியவர்களை கைவிட மாட்டார். அதுபோலத்தான் அன்னை சோனியாவும் நம்பியவர்களை கைவிட மாட்டார். பாமக தலைவர் ராமதாஸ் காங்கிரஸும் அவரோடு வந்துவிடும் என எண்ணினார். ஆனால் கலைஞர் அவர்களே நாங்கள் 35 பேரும் உங்களை கைவிட மாட்டாம். அன்னை சோனியா கைவிடமாட்டார். அதனால்தான் எங்கள் சின்னம் ‘கை‘யாக உள்ளது என்று பேசினார்.

மதசார்பற்ற ஆட்சி, தீவிரவாதத்திலிருந்து பாதுகாக்கும் ஆட்சி, ஏழைகளுக்கு உதவும் ஆட்சி எது என்று யோசித்துப்பாருங்கள். குறிப்பாக மசூதியை இடிக்க நினைப்பவர்களுக்கு, இடித்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட நினைப்பவர்களுக்கு உங்கள் ஒட்டு போக வேண்டுமா? நல்லாட்சி தொடர்ந்திட உதயசூரியன், கை சின்னத்தில் ஒட்டளியுங்கள் என்று திமுக பொதுச் செயலாளரும் தமிழக நிதி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் பேசினார்.

இறுதியாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் பேசினார். கூட்டணி கட்சிகளை மதிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அறிவுறுத்தினார். அது பெரியக் கட்சியாக இருந்தாலும், சரி சிறிய கட்சியாக இருந்தாலும் சரி அவர்களை நாம் மதிக்கவேண்டும் என்றவர் 2006ம் தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்தினால் தமிழ்நாட்டு நன்மை என்று சொன்ன அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்கள் 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். பெரியார் கண்ட கனவை, பேரறிஞர் அண்ணா கண்ட கனவை, பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவை முடக்கி போட வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? எந்த தைரியத்தில் வந்தது. இலக்கியத்தில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது இருக்கிறது. நமக்கு இனியவை நாற்பதுதான் என்று பேசினார்.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியபோது முதன்முதலில் திருவள்ளுர் பெண் வேட்பாளரை மு.க. ஸ்டாலின் அழைக்க அதன்பின் ஒவ்வொருவராக அழைத்தவர். வேட்பாளர்களில் கூட்டத்தினரை அதிகம் கவர்ந்தவர்கள் என்று பார்த்தால் தயாநிதி மாறன், மு.க. அழகிரி, நெப்போலியன், ரித்தீஷ் ஆகியோருக்கு கைதட்டல், விசில்கள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர்களில் ப. சிதம்பரத்தை தவிர அனைவரும் வந்திருந்தார்கள்.

ஆனால் திமுக கூட்டத்தில் இதுவரை நடைபெறாத ஒன்று மேடையில் நடைபெற்றது. வேட்பாளர்கள் அனைவரும் கலைஞரின் காலைத் தொட்டு வணங்கினார்கள். இது மனதுக்கு வேதனையளிக்கக் கூடிய செயலாக எனக்கு பட்டது.

சனி, ஏப்ரல் 18, 2009

மௌன சாமியார் வைகோ?

3 கருத்துகள்
மௌனம் ஏன்?

‘தமிழர்களின் 150 வருட கனவான சேதுசமுத்திர திட்டத்திற்காக நான் பாராளுமன்றத்தில் எத்தனை முறை பேசியிருக்கிறேன். சேதுசமுத்திரத் திட்டம் குறித்து அதிகம் பேசியவன் நான்தான்.’ 

இப்படி சேதுசமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் பேசியவர் வேறுயாருமல்ல நம்ம தன்மான சிங்கம் வைகோதான்.

அவர் மட்டுமல்ல இந்திய கம்யூனிஸ்ட் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் வரதராஜன், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வரவேற்று, நிறைவேற போகும் சந்தோசத்தில் பேசியதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

ஆனால் 2 நாள்களுக்கு முன்பு அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில், அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது. வெளியிட்டவர் ஜெயலலிதா. பெற்றுக்கொண்டவர் பிரகாஷ் காரத். அறிக்கையில் நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களுக்கு சேதுசமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பாமக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது. மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.

நான்தான் இந்தத்திட்டம் நிறைவேற காரணமானவன் என்று தொடக்கவிழாவில் சேதுசமுத்திரத் திட்டம் தோன்றியதிலிருந்து தொடக்க விழா வரை பேசிய வைகோ. இப்போது மௌனம் காப்பது ஏன்? 
கூட்டணியில் இருக்கும் மற்றக் கட்சிகளை விடுங்கள். வைகோ இதையறிந்த பின்னும் சும்மா இருக்கலாமா? சிங்கம் போல சீறியெழும் வைகோ இதுபற்றி வாய்திறக்காது ஏன்? தொகுதிகளில் ஒதுக்கீடு செய்ததிலிருந்து வைகோவின் மௌனம். அவரை மட்டுமல்ல, அவரது தொண்டர்களை மட்டுமல்ல. நம்மையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏன் இந்த மௌனம்?