திங்கள், மே 04, 2009

பேருந்து கட்டணம் - சரியா? தவறா?















மாத்தி யோசியுங்க!

பேருந்து கட்டண விவகாரம் வரலாற்று மோசடி என்று பாமக நிறுவனர் டாக்டரய்யா கூறியிருக்கிறார்.

டாக்டரய்யா அவர்களே!  இது ஏமாற்று வேலை என்று சொல்கிறீர்கள்? 

அதனாலென்ன? 

இருந்துவிட்டு போகட்டும். எத்தனையோ முறை தேர்தலில் வாக்களித்து ஏமாறவில்லையா? அதுபோல் எண்ணிக் கொள்கிறோம்.

ஓட்டுக்காக பேருந்து கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்?

தேர்தல் நேரத்தில் கிடைத்த இந்தச் சலுகை என்றாலும் ஏழை, நடுத்தர  மக்களுக்கு உபயோகமான, பயனுள்ள சலுகையாக இருக்கிறது. இது தங்களைப் போன்று குளுகுளு காரில் செல்லும் தலைவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை?

இப்போது அமைதியாய் இருந்துவிட்டு, தேர்தல் முடிந்தபின்பு மீண்டும் பேருந்து கட்டணத்தை ஏற்றும்போது நீங்களும், உங்கள் கூட்டணித் தலைவர்களும் குரல் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

ஓட்டுக்காக ஏழை, நடுத்தர மக்களுக்கு வழங்கிய சலுகையினை வெட்டவெளிச்சமாக்கி சலுகை கிடைக்காமல் செய்துவிட்டீர்கள். 

இனியாவது மாத்தி யோசியுங்க!

3 கருத்துகள்:

பீர் | Peer சொன்னது…

மாத்தி யோசிங்க இல்ல நண்பா, நேரா யோசிங்க...

இதையே தான் நானும் யோசித்தேன்.

அருமை!!!

பெயரில்லா சொன்னது…

Sir,Ramadoss wants to become the Chief minister of Tamil Nadu.So he supports Jaya to become the Prime minister.Anbumani as usual.This is the secret.

பெயரில்லா சொன்னது…

உண்மை.