செவ்வாய், ஏப்ரல் 21, 2009

எது இன்பம்?














இலக்கிய இன்பம்

இன்பத்துள் இன்ப மெது இன்பம் -இவ்
வையத்து பிறப்ப தென்பது பேரின்பம்
குழந்தை பருவ மதுவே ஆனந்தம்
குமரனா னதும் கன்னியி னின்பம்
கடவுளை காண்ப தென்பது பக்தின்பம்
கண்டதும் கேட்பது வரமென் னுமின்பம்
நித்திரையி லிருப்பதே ஒருவகை இன்பம்
நிலாமுகத் தாளருகினில் சுகம் இன்பம்
பச்சை புற்களில் படுப்பது தனியின்பம்
பருவத்தால் நாணுவது வெட்க மின்பம்
கல்லூரி படிப்பி னிடையில் காதலின்பம்
கற்பனைக் கெட்டிய வரையவளே இன்பம்
முத்தத்தால் பசித்தோம் சுவை யின்பம்
முடிவினிலே கிடைத்த தென்னவோ தனியின்பம்
இங்ஙனம் இன்பத்துள் இன்பம் வந்தாலும்
இலக்கியமே இன்பம்

கருத்துகள் இல்லை: