சனி, ஏப்ரல் 18, 2009

மௌன சாமியார் வைகோ?

3 கருத்துகள்
மௌனம் ஏன்?

‘தமிழர்களின் 150 வருட கனவான சேதுசமுத்திர திட்டத்திற்காக நான் பாராளுமன்றத்தில் எத்தனை முறை பேசியிருக்கிறேன். சேதுசமுத்திரத் திட்டம் குறித்து அதிகம் பேசியவன் நான்தான்.’ 

இப்படி சேதுசமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் பேசியவர் வேறுயாருமல்ல நம்ம தன்மான சிங்கம் வைகோதான்.

அவர் மட்டுமல்ல இந்திய கம்யூனிஸ்ட் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் வரதராஜன், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வரவேற்று, நிறைவேற போகும் சந்தோசத்தில் பேசியதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

ஆனால் 2 நாள்களுக்கு முன்பு அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில், அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது. வெளியிட்டவர் ஜெயலலிதா. பெற்றுக்கொண்டவர் பிரகாஷ் காரத். அறிக்கையில் நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களுக்கு சேதுசமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பாமக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது. மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.

நான்தான் இந்தத்திட்டம் நிறைவேற காரணமானவன் என்று தொடக்கவிழாவில் சேதுசமுத்திரத் திட்டம் தோன்றியதிலிருந்து தொடக்க விழா வரை பேசிய வைகோ. இப்போது மௌனம் காப்பது ஏன்? 
கூட்டணியில் இருக்கும் மற்றக் கட்சிகளை விடுங்கள். வைகோ இதையறிந்த பின்னும் சும்மா இருக்கலாமா? சிங்கம் போல சீறியெழும் வைகோ இதுபற்றி வாய்திறக்காது ஏன்? தொகுதிகளில் ஒதுக்கீடு செய்ததிலிருந்து வைகோவின் மௌனம். அவரை மட்டுமல்ல, அவரது தொண்டர்களை மட்டுமல்ல. நம்மையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏன் இந்த மௌனம்?

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

என்ன கொடுமை வைகோ?

8 கருத்துகள்
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்








அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றதை ஜெயா டிவியில் கண்டுகளிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

நான் பார்க்கும்போது சிம்மகுரலோன் வைகோ பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் போல உணர்ச்சிகரமாக, வீராவேசமாக அனல் பறக்கின்ற வார்த்தைகளைக் கொட்டி பேசினார். ஆனால் கூட்டத்தினரிடம் இருந்து எவ்வித பிரதிபலிப்பும் தென்படவில்லை.

அடுத்ததாக வந்தது புரட்சித் தலைவியின் அண்ணன் ராமதாசு பேச வந்தார். தவளைப் போல ஙொய் ஙொய் என்று ஏதோ ஏதேதோ பேசினார். நாற்பதும் நமதே என்றார் இறுதியில். கூட்டத்தினர் இப்போது அமைதி காத்தனர்.

அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் ராஜா பேசினார். தமிழை தட்டுதடுமாறி பேசினார் என்றே சொல்லலாம். அவருக்குப்பின் ஏ.பி. பரதன் பேசினார். கூட்டம் அமைதி காத்தது-

பிரகாஷ் காரத் பேசும்போது அருமையாக பேசினார். ஆனால் கூட்டத்தினர் அமைதி காத்தனர்.

இவர்களெல்லாம் பேசி முடித்தபோது ஒருவருக்கும் கைதட்டலே கிடைக்கவில்லை. 

இறுதியாக புரட்சித் தலைவி பேச வந்தார். என்றும்போல எழுதி வைத்தே பேசினார், பேசினார், பேசிக்கொண்டேயிருந்தார். உணர்ச்சி வேகத்திலும், குரலை உயர்த்தியும் பேசினார். என்ன அதிசயம் . புரட்சித் தலைவி பேசியும் கூட கூட்டம் கைதட்டவில்லை. ஆரவாரம் செய்யவில்லை. அது ஒரு கூட்டமாகவே தெரியவில்லை. 

கூட்டத்தில் அதிமுகவினரை தவிர மற்றக்கட்சிகளின் தொண்டர் ஒருவரையும், கொடியையும் நான் பார்க்கவில்லை ஜெயா தொலைக்காட்சியில்.
இதைவிட மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் முகத்தில் ஏதோ கவலையில் இருப்பதுபோல தோன்றினார்கள்.

வேட்பாளர்களை ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து வைத்தார். பாவம் வைகோ. ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். 

என்ன கொடுமை சார்?




வியாழன், ஏப்ரல் 16, 2009

தேர்தல் தலைவர்கள்

3 கருத்துகள்
















நம் நாட்டு ராஜாக்கள்

பாலென்பார் தேனென்பார்
பாசமே இது தானென்பார்
நானென்பார் நீயென்பார்
அண்ணன் தம்பி நாமென்பார்
பாரென்பார் படியென்பார்
பக்க பலம் நானென்பார்
காயென்பார் கனியென்பார்
காவல்காரன் நானேதானென்பார்
வாயென்பார் தாயென்பார்
உரிமையுடனே அழைத்திடுவார்
உங்கள் தொகுதி என்றாலோ
உடனே ஒடி வந்திடுவார்
தேர்தல் முடியும் வரை
முடிந்த பின்போ
பதவி கிடைத்து விட்டால்
பாராமல் சென்றிடுவார்
மந்திரி பதவி கிடைத்தாலோ
மறுதேர்தல் வரை வரமாட்டார்
அண்ணன் என்றே சென்றால்
அனுமதியில்லை என்பார்
தம்பி என்று  சென்றோ
தடியன்கள் தடுத்திடுவார்
உரிமையுடன் போனாலோ
உதறி தள்ளிவிடுவார்
உங்கள் தொகுதி என்றாலோ
உடனே தப்பியோடிடுவார்
இவர்களே நம் நாட்டு ராஜாக்கள்

திங்கள், ஏப்ரல் 13, 2009

நாமம் போடும் ராமதாஸ்

8 கருத்துகள்
வைகோ - 3

இந்தத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே இருதலைக் கொள்ளியாக தவித்தவர் யார் தெரியுமா?

வைகோ.

ஒவ்வொரு முறையும் வைகோவை பின்னுக்குத் தள்ளுபவர் யார் தெரியுமா?

நன்றாக யோசித்துப் பார்த்தால் டாக்டரண்ணன்தான் முதலில் நிற்பார்.

கூட்டணியில் முதலில் போய் சேருபவராக வேண்டுமானால் வைகோவாக இருக்கலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் கடைசியாக தான் இருப்பார்.

அன்பு சகோதரியால் பொடா சட்டத்தில் உள்ளே சென்றவர். அனைவரது முயற்சியாலும் வெளியில் வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகரில் தான் நிற்காமல் அரசியல் துறவியாக மாறி, சிப்பிபாறை ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் இந்த முறை விருதுநகரில் போட்டியிடுகிறாராம். மானத்தின் சின்னம், தன்மான சிங்கம் என்றெல்லாம் போற்றபட்ட வைகோ. தன்னை பொடா சட்டத்தில் சிறைக்குள் தள்ளியவரின் தயவில் விருதுநகரில் போட்டியிடுகிறார். வேடிக்கையாக இருக்கிறது வைகோ செயல்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோ திமுகவிடம் கேட்டதோ 25 இடம். கலைஞர் தருவதாக சொன்னதோ 22 இடம். 3 இடங்களுக்காக வைகோ சிறையிலிருக்கும்போது ஜெயலலிதாவை சகட்டுமேனிக்குத் திட்டி தீர்த்த நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் திமுகவை விட்டு அதிமுகவுக்கு செல்லலாம் என சொன்னதைக் கேட்டு அதிமுக சென்று, 35 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வென்றார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை ஜெயலலிதா நம்பிக்கைக்குரிய ஆளானார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வைகோ அதிமுகவிடம் 7 இடங்களைதான் கேட்டது. ஆனால் 3 இடங்கள்தான் தருவோம் என கூறி, இறுதியில் 4 இடங்களைத் தந்திருக்கிறார்கள். 

அப்போதும், இப்போதும் வைகோவுக்கு கிடைக்கவேண்டியதை கிடைக்கவிடாமல் செய்தவர் யார்? அன்பு சகோதரியின் டாக்டரண்ணன்தான்.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்ற பழமொழி வைகோ, ராமதாஸ் இருவருக்குமே பொருத்தமாக இருக்கிறது.

இப்போது வைகோ இழந்ததும் 3 இடங்கள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் வைகோவுக்கு ராமதாஸ் நாமம் போட்டுவிடுகிறார். இதெல்லாம் எப்போதுதான் 
வைகோவுக்கும் மதிமுக சகோதரர்களுக்கும் புரியப் போகிறதோ?