![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3RPT_cEpiD5uVWJjv5KtEWqF672Cf8iQ_mDpz8aeH0MrqnQb6n3WnAvO2j2KgnTDUSILHDIO3_CdbQe2TR_YQl0rADnymbqoV4f_WOpNZ11XAwdKoq-89TuZDhOVI32DHCZc_rg/s320/karunanidhi5.jpg)
இன்று புதிய சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக கூடுகின்ற நேரம்.
பேரவைத் தலைவர் வந்ததும், வழக்கம் போல் திருக்குறளுடன் அவைத் தொடங்கியது. நிதி அறிக்கை நிதி அமைச்சர் அன்பழகன் வாசிக்க எழுந்தார்.
கூச்சல், சத்தம் வந்தது.
அதிமுக வினர் கருப்பு உடையில் வந்திருந்தார்கள்.
யாரையோ ராஜினாமா செய் ராஜினாமா செய் என்று முழக்கமிட்டார்கள்.
புதிய சட்டப்பேரவையில் முதல் நிகழ்ச்சியே இப்படி எதிர்ப்பாக அமைந்தது.
எத்தனையோ எதிர்ப்புகளை எல்லாம் மீறி வெற்றிக் கண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் இப்படியொரு வெற்றியைத் தந்துவிட்டார்கள் அதிமுகவினர்.
புதிய மன்றத்தில் செயலாற்ற பகையுணர்வை காட்டாமல் நட்புணர்வைக் காட்டி நாட்டுக்கு நல்லது செய்யும் உறுப்பினர்களை இனியாவது நாம் தேர்ந்தெடுக்க முயல்வோம்.