திங்கள், பிப்ரவரி 23, 2009

ஜெயிச்சோமுங்கோ...


ஆஸ்கர் விருது.

இது நம்முடைய ஏக்கமாகவே இருந்துவந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இப்போது அந்த ஏக்கம் போய்விட்டது ஏ.ஆர். ரகுமான் மூலம்.

‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றிருக்கிறார் ரகுமான். அதுவும் இரண்டு. சிறந்த இசைக்கான விருதையும், சிறந்தப் பாடலுக்கான (ஜெய் ஹோ) விருதையும் பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

நடிகர் திலகம், உலக நாயகன் என்ற இரண்டு மாபெரும் நடிகர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும், கிடைக்கும், கிடைக்குமென எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒவ்வொரு தடவையும் நாம் ஏமாந்ததுதான் மிச்சம்.

ஆனால் இந்த முறை ஏமாற்றமடையாமல் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் ரகுமான். பெருமையான, மகிழ்ச்சியான விஷயம்தான்.

ஒருபக்கம் இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கின்றதைக் கண்டு வேதனைப்பட்ட உலகத் தமிழர்களுக்கு இது, புண்பட்ட மனத்தை மயிலிறகால் வருடியதுபோல் உள்ளது.

’ஜெய் ஹோ.... ஜெயிச்சோமுங்கோ....’

கருத்துகள் இல்லை: