வெள்ளி, மார்ச் 06, 2009

குடிகாரர்கள் ஓட்டு யாருக்கு?

சாலையில் ஒருவர் நின்று கொண்டு யாரையோ சரமாரியாக வசைப்பாடிக் கொண்டிருந்தார். போவோர் வருவோர் எல்லாம் கண்டும் காணாமலும் சென்றனர்.

மெல்ல மெல்ல என் அருகில் வந்தார் அந்த நபர். போதை நெடி என்னையும் தாக்கியது. தள்ளாடிதான் போனேன்.

என்னருகில் வந்தார்.

‘எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். அவன் பேசாம சொல்லிட்டான். இவரு கேட்டுட்டாரு.’

‘யார் அந்த அவன்? யார் அந்த இவரு?’ எனக்கு ஒன்றும் புரியல.

‘இன்னாபா பிரியல.’

நான் புரியவில்லையென்று தலையாட்டினேன்.

‘அதாம்ப்பா, நம்ம ராமதாசு. சும்மாயில்லாம மதுக்கடய மூடுன்னு போராட்டம் நடத்துனா. கலைஞரு சரின்னு கடை நேரத்த கொறச்சுட்டாரு.’

‘அதனால இப்ப என்ன?’ கொஞ்சம் பயந்துதான் கேட்டேன்.

‘காத்தால 10 மணிக்கு தொறந்து நைட்டு 10 மணிக்கு கடைய மூடுறான். அப்படி மூடுன்னா. அதுக்கு மேல எவனும் குடிக்கமாட்டான்னு நெனப்பு. அதானில்ல. பத்து மணிக்கும் அப்புறம் ப்ளாக்குல வாங்கி குடிக்கிறான் தெரியுமா? ப்ளாக் விக்கிறதுக்குன்னு ஆளு இருக்கு. டூப்ளிகேட் சரக்கு. அதுவும் 65 ரூவா சரக்க 100 ரூபாய்க்கு விக்கிறானுங்கோ. இதனால என்னாச்சு தெரியுமா? எங்களுக்கு 35 ரூவா கூடுதல் செலவுதானே? நீ சொல்லு.

நான் எதுவும் பேசவில்லை.

அதுமட்டுமா. கவர்மெண்ட்டுக்கு எவ்வளவு லாசு (நஷ்டம்). இதெல்லாம் தெரியாம கடைய மூடுன்னு இவர் சொல்வாராம். அவரு கேட்பாராம். அதனால குடிகாரனுங்க எல்லாம் இந்த தபா கண்டிப்பா ராமதாசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்.’

அவர் அந்த இடத்தைவிட்டுச் சென்றபின்னும் நெடி போகவில்லை. நான் போய்விட்டேன் வீட்டுக்குள்ளே.

தேர்தலில் ராமதாசுக்கு ஓட்டு விழுமா? விழாதா?

இவர்களும் அதை நிர்ணயிப்பவர்கள்தானே?

கருத்துகள் இல்லை: