செவ்வாய், பிப்ரவரி 24, 2009


எழுத்து ஆளர்?

மேலே படத்திலுள்ளவர் யார்? என்று நீங்கள் கேட்கலாம்.

சொல்கிறேன்.

அவர் யார்?

என்ன பேர்?

எந்த ஊர்?

என்ன செய்கிறார்?

என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் எனக்குத் தெரியாது.

ஆனால் சமீபத்தில் அவரை நான் கண்டது கோவை எக்ஸ்பிரஸில் தான். காலை 6.20 மணிக்கு ரயில் கிளம்பும் முன் ஏறி எனது இருக்கைக்கு எதிரேதான் அவர் அமர்ந்தார். வந்தவுடன் பையிலிருந்து பேப்பர்களை எடுத்தார். எழுத ஆரம்பித்தார்.
எழுதினார்.

எழுதினார்.

எழுதினார்.

எழுதிக்கொண்டேயிருந்தார். குனிந்த தலை நிமிரவே இல்லை. டிபன், காபி ஏன் தண்ணீர்கூட குடிக்கவே இல்லை. எழுதினார் எழுதினார் அப்படி எழுதிக்கொண்டேயிருந்தார்.

ரயிலில் தனக்கு எதிரில் யார் இருக்கிறார்கள். பக்கத்தில் யார் இருக்கிறார்கள்? என்றுகூட அவர் கவனித்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
இடையில் ஒரு தடவை மட்டும் இயற்கை உபாதைக்காக எழுந்து சென்றார். வந்தவர் மீண்டும் எழுதத் தொடங்கினார்.

காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்கள் கடந்து சென்றன. அவர் இறங்கவும் இல்லை. எழுதுவதை நிறுத்தவும் இல்லை. ரயில் சென்ற வேகத்திற்கு அவரும் எழுதித்தள்ளிக்கொண்டேயிருந்தார். எழுத்தாளர்கள்கூட இந்தளவிற்கு எழுதுவார்களா? என்பது சந்தேகம்தான். இன்றைக்கு எத்தனை எழுத்தாளர்கள் பேனா பிடித்து எழுதுகிறார்கள்?

அப்படி என்னதான் எழுதுகிறார்? என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது எனக்கு?

அவர் எதிரில் சென்று அமர்ந்தேன். அவர் என்னை சிறிதும் கவனிக்கவில்லை. நான் எட்டிப் பார்த்தேன்.

அவர் எழுதிக் கொண்டிருந்தது இதுதான்.

‘ராம ராம ராம.’


4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அட ராமா!

பெயரில்லா சொன்னது…

ஒருவேளை ராம்சேனாவோட தீவிர ஆதரவாளரா இருப்பாரோ?

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

அடடே.. அண்ணாச்சி அருமையா கதை எழுதுகிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நல்லா இருக்குண்ணே!

பெயரில்லா சொன்னது…

அடச் சே...