இன்று நடப்பதை அன்றே தன் வசனத்தில் எழுதியிருந்தார் கலைஞர். அவர் ஒரு தீர்க்கதரிசிதானே.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கலைஞரின் வசனம்
காஞ்சிபுரம் ஐயருக்கு சமர்ப்பணம் ஆக்குகிறேன்.
கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.
கடவுள் பக்தர்களும் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால்.
Tuesday, November 24, 2009
Thursday, October 01, 2009
சிங்காரி சரக்கு

சரக்கும்.. இருக்கு
நீண்ட நாட்களாக ப்ளாக்கில் எதுவும் போடவில்லையே. ஏன்? நிறைய பேர் கேட்டார்கள்.
சரக்கு இல்லாமல் எதை போடுவது என்று யோசித்திருக்கையில்....
இதோ ஒரு அறிவிப்பு
"டாஸ்மாக்' கடைகளில் இன்று (01.10.09) முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது.
58, 59, 67 ரூபாய் என்று விற்கும்போது, மீதி சில்லரையை விற்பனையாளர்கள் கொடுப்பதில்லை என்ற பிரச்னை சமாளிக்கும் வகையில் "ரவுண்ட்' செய்து விற்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் பெருகும்.
" பழைய விலையும் (புதிய விலையும்)
குவார்ட்டர் ரேட்
எம்.சி., பிராந்தி ரூ.67 (70)
ஓல்டு மங்க் ரூ.59 (60)
ஹனிடே ரூ.58 (60)
ஓல்டு மாஸ்டர் ரூ.58 (60)
டாப் ஸ்டார் ரூ.58 (60)
எஸ்.என்.ஏ., ரூ.67 (70)
மேன்சன் ஹவுஸ் ரூ. 77 (80)
கார்டினல் ரூ.68 (70)
பீர்:
கல்யாணி ரூ.67 (70)
மார்க்கோ போலா ரூ.58 (60)
கிங் பிஷர் ரூ.62 (65)
பிளாக் நைட் சூப்பர் ஸ்டிராங் ரூ.58 (60)
ஓரியன் சிக்ஸ் தவுசண்ட் ரூ.61 (65)
எப்படி நம்ம சரக்கு...
Wednesday, July 15, 2009
சரிசெய்யப்பட்ட இரும்பு தூண்

நேற்று கேபிள் ஓயரில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு தூண் பற்றி புகைப்படம் வெளியிட்டிருந்தேன். இன்று காலை செல்லும்போது பார்த்தேன். தமிழ்நாடு மின்சார வாரியம் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு புதிய இரும்பு தூணை அமைத்ததோடு பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் பெரும் ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளது. மிக வேகமாக செயல்பட்டு பழுதை சரிசெய்த மின்சார வாரியத்திற்கு நன்றி. இதுபோல் மின்வெட்டையும் சீர் செய்தால் நன்றாக இருக்கும்.
லேபிள்கள்:
புகைப்படச் செய்தி
Tuesday, July 14, 2009
இரும்புத் தூண்
இன்று காலை நான் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது மந்தவெளி ஸ்கூல் வியூ ரோட்டிலுள்ள ‘சிகப்பி ராமசாமி தொடக்கப்பள்ளி’யின் அருகில் உள்ள இரும்பு தூண் உடைந்து கேபிள் ஒயரில் தொங்கிக்கொண்டிருந்தது. அதனை என் செல்போனில் படம் பிடித்தேன். (படம் கீழே) பள்ளிக்கு அருகிலுள்ள இந்த உடைந்த தூணை உடனே அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.


லேபிள்கள்:
புகைப்படச் செய்தி
Saturday, July 11, 2009
என்ன கொடுமை சார்?

கோபக்காரன்
ராபர்ட்.
அதிகாலையிலேயே எழுந்துவிடுவான்.
என்றும்போல அன்றும் எழுந்துவிட்டான். யாரும் அவனை கவனிக்கவில்லை. அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.
ராபர்ட்.
அதிகாலையிலேயே எழுந்துவிடுவான்.
என்றும்போல அன்றும் எழுந்துவிட்டான். யாரும் அவனை கவனிக்கவில்லை. அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.
உம்மென்று இருந்தான்.
கொஞ்சம் சத்தம்போட்டு பார்த்தான் அப்போதும் யாரும் அவனைக் கவனிக்கவில்லை. கோபம் அதிகமானது.
டட்... டட்... டட்...
பக்கத்திலிருந்த கதவைப் பிடித்து தள்ளினான். கதவு சத்தம் கேட்டும் யாரும் அவனைக் கவனிப்பதாக இல்லை. கோபம்
இன்னும் அதிகமானது.
கீழே கிடந்த கால்மிதியடியில் தன் கோபத்தைக் காண்பிக்க ஆரம்பித்தான்.
கால்மிதியடி அவனிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டது. கடைசியில் அதை துண்டு துண்டாக கிழித்தே விட்டான்.
அப்படியும் யாரும் கவனிக்காததால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.
பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா மணியை தற்செயலாகப் பார்த்தார். அவருக்கும் கோபம் வந்தது. ‘டேய்... டேய் என்னடா பண்ணுற ராஸ்கல். ஏய் மங்களம். முதல்ல இங்க வா. இங்க வந்து இவன முதல்ல கவனி அப்பதான் இவன் சும்மா இருப்பான். இல்லன்னா கத்திக்கிட்டேயிருப்பான். சீக்கிரம் வா.’
அப்பாவின் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து அம்மா, ‘இதோ வந்துட்டேன். அவனுக்காகத்தான் தயார் பண்ணிட்டிருந்தேன். அதுக்குள்ளே அவனுக்கு அவசரம். நான் என்ன பண்ணுறது? டேய்... அம்மா வர்றதுக்குள்ளே என்னடா அவசரம்? ஏன் இப்படி ரகளை பண்ணுற? ஒருநாளைக்கு பொறுத்துக்க மாட்டியா என்ன?’
சத்தம் போட்டுக் கொண்டே வந்த அம்மாவைப் பார்த்ததும் செல்லமாய் சிணுங்கிக்கொண்டே படுத்தான் ராபர்ட்.
அம்மா பாலை ஊற்றினாள். ராபர்ட் அதை மடக் மடக்கென்று வாலை ஆட்டிக்கொண்டே நக்கி சாப்பிட ஆரம்பித்தான்.
மங்களம் அந்த வாயில்லா ஜீவனை தடவிக்கொடுத்தாள்.
Friday, June 05, 2009
மலரும் நினைவுகள்
தூர்தர்ஷன்
சில விஷயங்களை நாம் எவ்வளவு நினைத்தாலும் மறக்க முடியாது. நம் மனத்தில் ஆழத்தில் அழுத்தமாக பதிந்திருக்கும். சிறுவயதில் என்னைக் கவர்ந்த இசையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
அந்த இசை என் மனத்தை ஏதோ செய்தது. அப்போதும், இப்போதும். அது எந்த இசை என்றால் தூர்தர்ஷன் தொடங்க இசைதான்.
ஆம் நாளுக்கு நாள் ஒரு தொலைக்காட்சி ஒன்று புதிதாக வந்துகொண்டே இருக்கும் இந்த காலத்தில், எத்தனையோ தொலைக்காட்சிகள் வந்திருந்தாலும், நான் முதன்முதலில் பார்த்து ரசித்தது சென்னை தொலைக்காட்சியைத்தான்.
அதிலும் தொலைக்காட்சி தொடங்கும்முன் கொய்ங்............ என்று ஒரு சத்தம் வந்துகொண்டிருப்பதில் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.
குறிப்பாக தொலைக்காட்சி தொடங்குவதற்காக அந்தக் கால தூர்தர்ஷன் எம்பளம் சுழன்றுகொண்டே தொடங்க இசை வரும். அந்த இசையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சிறுவயதி்ல் என் மனதை நெருடி, வருடி ஏதோ செய்தது இன்றைக்கும் என் நினைவில் இருக்கிறது. அந்த இசையை இப்போது கேட்டாலும் ஆனந்தமாகதான் இருக்கும்.
ஆனால் தூர்தர்ஷன் இப்போதெல்லாம் அந்த இசையை காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே அந்த இசைக்காட்சியைப் பார்க்காதவர்களுக்காக, கேட்காதவர்களுக்கோ, இதோ...
Thursday, June 04, 2009
‘லூசுத்தனமாப் பேசாத’, ‘லூசாட்டம் பண்ணாத’

பைத்தியக்கார உலகம்
யாராவது உங்களைப் பார்த்து பைத்தியம் என்றால் உங்களுக்குக் கோபம் வருமா? வராதா?
அப்ப வராதா? என்று கேட்காதீர்கள். கண்டிப்பாக வர வேண்டும். அப்படி கோபம் வரும் என்றால் இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
யாராவது உங்களைப் பார்த்து பைத்தியம் என்றால் உங்களுக்குக் கோபம் வருமா? வராதா?
அப்ப வராதா? என்று கேட்காதீர்கள். கண்டிப்பாக வர வேண்டும். அப்படி கோபம் வரும் என்றால் இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
உலகில் எங்காவது ஓர் மூலையில் யாராவது ஒருவர் பைத்தியக்காரத்தனமானச் செயல்களைச் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு முன்னரும் இருந்திருக்கிறார்கள். உலகப் புகழ் பெற்றவர்களும் அடங்குவர்.
உலகின் மகா கிறுக்கன்கள் சிலரைப் பற்றி பார்ப்போமா?
நாம் எதைச் சாப்பிட்டாலும் நான்கைந்து முறை மென்றுவிட்டு உணவை முழுங்கிவிடுவோம். ஆனால், ஒருவர் சாப்பிடும்போது வாய்க்கு உணவு போனவுடன் ஒரு பல்லுக்கு முறையென 32 முறை மென்றபிறகே முழுங்குவாராம். இப்படி ஒரு வாய் உணவிற்கு மட்டும் இந்தச் செயலைச் செய்ய மாட்டாராம். ஒவ்வொரு வாய் உணவிற்கும் அவரின் செய்கை இருக்குமாம். அவர் யார் தெரியுமா? இங்கிலாந்தில் நான்கு முறை பிரதம மந்திரியாக இருந்த வில்லியம் கிளாடுஸ்டோன் என்பவருக்கு தான் இந்த விநோதமாக பழக்கம் இருந்திருக்கிறது.
நியுயார்க்கிலுள்ள ஓர் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தவர் ஆதர்ஸ்ட் பெல்மார். இவருக்கு சிறுவயதிலிருந்தே குதிரை பைத்தியம். குதிரை என்றால் போதும் உலகையே மறந்துவிடுவாராம். தனது பிள்ளைகளைக் காட்டிலும் குதிரையின் மேல் அன்பை அதிகம் பொழிந்தாராம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எப்படி? குதிரைகள் தூங்குவதற்காக வீட்டுக்குள்ளேயே படுப்பதற்கு மெத்தை, நான்கு கால்களுக்கு தலையணை என சகல வசதிகளையும் குதிரைகளுக்கு செய்து கொடுத்திருக்கின்றார்.
பென்ரோஸ் ஒரு அமெரிக்கப் பெண்மணி. இவர் எப்படியென்றால் நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி போல எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு சமயம் அமெரிக்காவில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னல் என பயங்கரமான மழையில் இவரது வீடு பலத்த சேதமுற்றது. பென்ரோஸுக்கு பயங்கரமான கோபம் வந்தது. மழை நின்றவுடன் நீதிமன்றத்திற்கு நேராகச் சென்று திட்டமிட்டே தனது வீட்டை சேதப்படுத்தியதாக கடவுள்மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். நஷ்ட ஈடாக ஒரு லட்சம் டாலரும் கேட்டிருந்தார். 1969ம் வருடம் போடப்பட்ட இந்த கேஸ் தள்ளுபடியானது.
உலகப் புகழ் பெற்ற ஓவியர் சல்வடார் டாலி. இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். லண்டனில் ஒரு ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்க வேண்டுமென்று கண்காட்சியை நடத்துபவர்கள் இவரிடம் கேட்டிருந்தனர். இவரும் வருகிறேன் என்றார். விழா நாளும் வந்தது. கண்காட்சியை நடத்துபவர்கள் இவரை வரவேற்க வாயிலில் காத்திருந்தனர். கார் வந்தவுடன் விழாக் குழுவினர் காரினருகே வந்து வரவேற்க தயாரானார்கள். கார் கதவு திறக்கப்பட்டு, டாலி நீச்சல் உடையில் வந்திறங்கினார். எல்லோருக்கும் அதிர்ச்சியடைந்தார்கள். அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத டாலி “இந்த உலகம் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும்என்று சொன்னாராம்.
இதுபோல் உலகில் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும், பல்வேறு விதமான பைத்தியங்கள் இருந்திருக்கிறார்கள். ‘பைத்தியக்கார உலகமடா’ என்பது சரியாகத்தான் இருக்கிறது.
சரி. இனிமேலாவது, ‘போடா லூசு’, ‘லூசுத்தனமாப் பேசாத’, ‘லூசாட்டம் பண்ணாத’ என்று யாராவது சொன்னால் யோசித்துக் கோபப்படுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

