வியாழன், மார்ச் 04, 2010

‘ஓ’ போடுங்கள் நித்யாவுக்கு....

நித்தியானந்தர் செய்தது தப்பு.

ரஞ்சிதா செய்தது தப்பு.

அந்த அசிங்கத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது சன் நியூஸ் தப்பு.

அந்த அசிங்கத்தின் சிடியை நக்கீரன் விலைக்கு வேண்டுமா? என்று கேட்டது தப்பு.

அந்த வீடியோ காட்சிகளை மறுபடி மறுபடி பார்த்தது தப்பு.

அந்தக் காட்சி முழு வடிவை இணையத் தளத்தில் தேடியது தப்பு.

புகைப்படங்களை உற்று உற்று நோக்கியது தப்பு.

இணையத் தளத்தில் அன்றைய நாள் முழுதும் மற்ற வேலைகளை விட்டு, இதையே வேலையாகச் செய்துகொண்டிருந்து தப்பு.

சிடியைத் தேடி பர்மா பஜார் போன்ற இடங்களில் தேடி அலைந்தது தப்பு.

ஒரு தப்பிலிருந்து எத்தனையோ தப்புகள்.

தப்புகளில் நித்தியானந்தர் செய்தது பெரிய தப்புதான். இருந்தாலும் அவருக்கு ஒரு விஷயத்தில் நாம் அனைவரும் ‘ஓ’ போட வேண்டும். எதற்கு?

என்றும் இணையாத, என்றும் சேராத இரு துருவங்களாகவே இருந்து வந்த திராவிட கழகத்தையும் ஆர்எஸ்எஸ்., இந்து மக்கள் கட்சிகளையும் இந்த விஷயத்தில் கைகோர்க்க வைத்தது நல்ல விஷயம்தானே.

அதற்காகத்தான் ‘ஓ’ போட சொன்னேன்.

கருத்துகள் இல்லை: