செவ்வாய், நவம்பர் 24, 2009

கலைஞர் தீர்க்கதரிசி

இன்று நடப்பதை அன்றே தன் வசனத்தில் எழுதியிருந்தார் கலைஞர். அவர் ஒரு தீர்க்கதரிசிதானே.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கலைஞரின் வசனம்

காஞ்சிபுரம் ஐயருக்கு சமர்ப்பணம் ஆக்குகிறேன்.

கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

கடவுள் பக்தர்களும் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால்.

கருத்துகள் இல்லை: