செவ்வாய், மே 12, 2009

அன்னையும் அம்மாவும்















அதிக பங்கு யாருக்கு?

உலகிலுள்ள சில தமிழ் அமைப்புகளால் இன்று ‘ஈழத்தாய்’ என்றழைக்கப்படும் செல்வி ஜெயலலிதா. இதுவரை ஈழத்திற்காகவும், ஈழத்தில் வாழும் மக்களுக்காகவும், ஈழத்திற்காக போராடும் புலிகளுக்காகவும் என்ன செய்துள்ளார்? என்பதை முதலில் விளக்க வேண்டும். இல்லை யோசித்து பார்க்க வேண்டும்.

இன்று நான் தனி ஈழம் வாங்கித் தருவேன் என்று முழங்கியதால் மட்டுமே அவர் ஈழத்தாய் என்றழைக்கப்பட்டது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது.

ஈழப் பிரச்னையில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று முதலில் கூறியதே செல்வி ஜெயலலிதாதான். அதன்பின்தான் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தது.

விடுதலைப் புலிகள் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியவர் ஜெயலலிதா.

தமிழகத்தில் சுப்பிரமணிய சுவாமி, சோ, ஜெயலலிதா இந்த மூவரும் எப்போதும், எந்நேரமும், அவ்வளவு ஏன் தூங்கிக் கொண்டிருக்கும்போது இவர்களை எழுப்பிக் கேட்டாலும் ‘என்னைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருக்கின்றனர்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதில் செல்வி மட்டும் தற்போது ஈழத்தை அமைத்தே தீருவேன் என்றும், அதற்காக எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவது வேடிக்கை. ஏமாற்று வேலை. மோசடி வேலை.

அப்படியே அம்மையார் 40 தொகுதியிலும் ஜெயித்தால்கூட எப்படி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவார்? ஏதோ பன்னீர்செல்வத்தையும் ஜெயகுமாரையும் அனுப்புவதுபோல சொல்லிக்கொள்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அதிமுக கட்சி மந்திரிசபையில் இடம்பிடித்தது. அப்போதும் தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சிதான். அதனை கலைக்க வேண்டுமென்று பிரதமர் வாஜ்பாயை மிரட்டினார். ஆனால் வாஜ்பாயை மசியவில்லை. உடனே ஆதரவை வாபஸ் பெற்றார். விளைவு 11 மாதத்திலேயே அடுத்த தேர்தலை சந்தித்தது. இப்போது வெற்றி பெற்றாலும் அதுதான் நடக்கும்?

ஈழப் பிரச்னைக்காக ஒன்றும் செய்துவிட போவதில்லை. ஈழப் பிரச்னையில் இப்போது முக்கியப் பங்கு வகிப்பவராக கூறப்படும் சோனியா காந்தி. சோனியா காந்தியாவது ராஜீவ் காந்தி கொலைக்குப் பழிவாங்குகிறார் என்று அனைவரும் கூறுவதுபோல் வைத்துக்கொண்டாலும்கூட, இத்தனை நாள்கள், இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதா எதற்காக விடுதலைப் புலிகளையும், ஈழப் பிரச்னையையும் கண்டுகொள்ளாமல் பழிவாங்கினார் என்பதை அனைவரும் உணர தவறிவிட்டனர்.

ஈழப் பிரச்னையில் சோனியா காந்தியின் பங்கு இருக்கிறது என்று நம்பும் மக்களே, சோனியாவின் பங்கைவிட ஜெயலலிதாவின் பங்கு அதைவிட கூடுதலாகவே இருந்திருக்கிறது. இருக்கிறது. இருக்கப்போகிறது என்பதையும் நம்புங்கள்.

இதுவரை ஈழப் பிரச்னையில் துரோகம் இழைத்தவர் என்று பார்க்கும்போது அதிக பங்கு வகித்தவர் என்றால் சோனியாவைவிட ஜெயலலிதாதான் முன்னிலையில் இருப்பார்.

கருத்துகள் இல்லை: