வியாழன், ஜூன் 17, 2010

புறக்கணிப்போம்.... இறுதிப் போட்டியை


இதைப் பற்றி இனியும் எழுதவேண்டாம் என்றுதான் இருந்தேன். எப்பொழுது தேன் போன்ற குரலினால் என்னைப் போன்றவர்களை மயக்க வைத்த ஸ்ரீநிஷாவின் திறமையை மதிக்காமல், வெளியேற்றிவிட்டு, மலையாளிகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.

இன்று மாலை 6 மணிக்கு அந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விஜய் டிவியில் நேரடியாக ஒளிப்பரப்ப படுகிறதாம். ஏற்கெனவே முடிவு செய்துபின் இப்படியொரு கண்துடைப்பு இறுதிப்போட்டி எதற்கு?

இறுதிப் போட்டியில் பாடும் குழந்தைகளின் திறமையை நான் குறை கூறவில்லை. ஆனாலும் அவர்களையெல்லாம் விட ஒருபடி மேலே ஸ்ரீநிஷா பாடுவதாக எண்ணுகிறேன். அனைத்துவிதமான பாடல்களும் அந்தச் சின்னக் குரலில் அபாரமாக வெளிப்படுத்தி லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தாள். இதுப்பற்றி அண்ணாச்சி முகில் ...

கே.வி. மகாதேவன், எம்எஸ்வி., இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் போன்றவர்கள் இசையமைத்த அத்தனை வகையான பாடல்களையும் பாடத் திறமை படைத்த ஒரே சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாதான்.

அப்படிப்பட்ட ஸ்ரீநிஷா பங்கேற்காத விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 இறுதிப் போட்டியை நான் பார்க்காமல் புறக்கணிக்கப்போகிறேன்.

அதுபோல் ஸ்ரீநிஷாவின் ரசிகர்கள் அத்துணை பேரும் புறக்கணிப்போம்.

உண்மையான திறமையை மதிக்காத, ஏற்கெனவே வெற்றியாளரை முடிவு செய்த அந்த இறுதிப் போட்டியை புறக்கணிப்போம்.

4 கருத்துகள்:

Thiruvithamcode சொன்னது…

no need to see malayalee or tamil. thiramai iruntha paaraddiye akanum. stop to post this type of mokke pathivu

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

ஆமாம் சார். அவங்க பண்ற வணிக தந்திரங்கள் ஒருமாதிரி கொடுமைன்னா இந்த மாதிரி பதிவுகள் இன்னொரு மாதிரியான கொடுமையா இருக்கு.

சீமான்கனி சொன்னது…

மன்னிக்கவும் நண்பரே கொஞ்சம் இங்கு வந்து பார்க்கவும்... தாழ்மையுடன்...சீமான்கனி.

http://ganifriends.blogspot.com/2010/06/blog-post_18.html

சீமான்கனி சொன்னது…

ஸ்ரீநிஷா வை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை மட்டுமல்ல, நித்யஸ்ரீ பிரியங்கா இன்னும் பலர் அருமையான பாடகர்கள் தான் இதை ஏன் மொழி உணர்வோடு பார்கிறீர்கள் என்று தெரியவில்லை...