வெள்ளி, ஜூன் 05, 2009

மலரும் நினைவுகள்

தூர்தர்ஷன்

சில விஷயங்களை நாம் எவ்வளவு நினைத்தாலும் மறக்க முடியாது. நம் மனத்தில் ஆழத்தில் அழுத்தமாக பதிந்திருக்கும். சிறுவயதில் என்னைக் கவர்ந்த இசையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

அந்த இசை என் மனத்தை ஏதோ செய்தது. அப்போதும், இப்போதும். அது எந்த இசை என்றால் தூர்தர்ஷன் தொடங்க இசைதான். 

ஆம் நாளுக்கு நாள் ஒரு தொலைக்காட்சி ஒன்று புதிதாக வந்துகொண்டே இருக்கும் இந்த காலத்தில், எத்தனையோ தொலைக்காட்சிகள் வந்திருந்தாலும், நான் முதன்முதலில் பார்த்து ரசித்தது சென்னை தொலைக்காட்சியைத்தான். 

அதிலும் தொலைக்காட்சி தொடங்கும்முன் கொய்ங்............ என்று ஒரு சத்தம் வந்துகொண்டிருப்பதில் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக தொலைக்காட்சி தொடங்குவதற்காக அந்தக் கால தூர்தர்ஷன் எம்பளம் சுழன்றுகொண்டே தொடங்க இசை வரும். அந்த இசையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சிறுவயதி்ல் என் மனதை நெருடி, வருடி ஏதோ செய்தது இன்றைக்கும் என் நினைவில் இருக்கிறது. அந்த இசையை இப்போது கேட்டாலும் ஆனந்தமாகதான் இருக்கும். 

ஆனால் தூர்தர்ஷன் இப்போதெல்லாம் அந்த இசையை காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே அந்த இசைக்காட்சியைப் பார்க்காதவர்களுக்காக, கேட்காதவர்களுக்கோ, இதோ...

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

antha kaalathukku kootikittu poivittathu oru nimidam intha isai.
Vayasali

mugil சொன்னது…

அழகன் படத்துல கேபி அழகா இந்த இசையை கொண்டு வந்திருப்பார்.