சனி, பிப்ரவரி 14, 2009

காதலென்பது...

காலை 6 மணி.

வீட்டை விட்டு வெளியே வந்தான் அவன்.

ரோட்டில் நடமாட்டம் அதிகம் இல்லை. சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கேட்டின் அருகில் நின்றான். இரண்டு வீடுகள் தள்ளி எதிர்புறமுள்ள வீட்டை உற்று நோக்கினான்.

யாரும் நிற்பதாக தெரியவில்லை. தலையைக் குனிந்து கொண்டான்.

‘க்ரீரீ..................ரீச்’ 

கதவு திறக்கப்படும் சத்தம்.

சத்தம் வந்த பக்கத்தைப் பார்த்தான். அந்த வீடுதான். மெல்ல மெல்ல தலை வெளியே தெரிந்தது.

உள்ளுக்குள் அவனுக்கு சந்தோஷம் பெருகெடுத்து ஓடியது. துள்ளிக் குதித்து ஒடணும்போல தோன்றியது. இருந்தாலும் ஏதோ முனங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வீட்டிலிருந்து மெல்ல அவள் வெளியே வந்தாள். அவனைப் போலவே அங்குமிங்கும் பார்த்தாள்.

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாரும் தென்படவில்லை.  தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். 

சிறிது தூரம் சென்றபின் திரும்பிப் பார்த்தாள்.

அவனும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். 

சில அடிகளில் அவளை நெருங்கிவிடுவான்.

நெருங்கிவிட்டான்.

வெட்கத்தில் அவள் கொஞ்சம் விலகி சென்றாள். அவன் விடவில்லை. பின்தொடர்ந்தான்.

ஒரு வீட்டின் முன்புறமுள்ள மரத்தின் அடியில் நின்றார்கள்.

இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘ஏய்... ச்சூ... போ...’ வீட்டுக்காரர் விரட்டினார்.

அந்த இரண்டு நாய்களும் ஓடி தங்களின் வீட்டுக்குள் புகுந்து கொண்டன.

இதுவும் காதல் தானே?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

லொள் லொள்!!!!!!!!!